மலையாளத் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் ஜோஜு ஜார்ஜ். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் மற்றும் பப்பூன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆண்டனி என்ற மலையாள திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். குறைந்த அளவு திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்த நிலையில் ஆண்டனி திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் லண்டன் சென்றுள்ளார். அங்கு அவரிடம் இருந்து 15,000 பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் 15 லட்சம் ரூபாய் திருடப்பட்டு உள்ளது. அதே சமயம் அவரது பாஸ்போர்ட்டும் மாயமானதாக கூறப்படுகிறது. படக்குழுவினருடன் லண்டனில் ஷாப்பிங் சென்ற போது இந்த சம்பவம் நடந்ததாகவும் படத்தின் தயாரிப்பாளர்கள் இருவரின் பாஸ்போர்ட் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து லண்டனில் உள்ள இந்திய தூதரகம் தலையிட்டு காணாமல் போன பாஸ்போர்ட்டுக்கு பதிலாக தற்காலிக பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர் படக்குழுவினருடன் இந்திய திரும்பியுள்ளார். பிரபல நடிகரிடம் திருட்டு கும்பல் கைவரிசை காட்டிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…
1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…
இன்று, ஏப்ரல் 22, 2026 அன்று, ஜோதிட உலகின் மிக முக்கிய நிகழ்வாக சனி பகவான் மீன ராசியில் 'உதயம்'…