Categories: சினிமா

எனக்கு பிடிச்ச பொண்ணை ஒருத்தன் சைட் அடிச்சான்… சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்த ஹரிஷ் கல்யாண்..!

Spread the love

தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அரிது அரிது, சட்டப்படி குற்றம் மற்றும் சந்தா மாமா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் சில தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் கூட நடித்துள்ளார். இவருக்கு ஆரம்பத்தில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

வைல்டு கார்டு என்ட்ரி மூலமாக இரண்டாவது நாளில் உள்ளே நுழைந்த இவர் 98 நாட்கள் தாக்குப்பிடித்து இரண்டாவது ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டார். பிக் பாஸ் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் மிகவும் நேர்த்தியான காதல் கதைகளை தேர்வு செய்து நடித்த தற்போது இளம் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, ஓ மன பெண்ணே, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், LGM உள்ளிட்ட திரைப்படங்கள் அனைத்துமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் குடிகொண்டு விட்டார். தற்போது இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதனிடையே நடிகர் ஹரிஷ் கல்யாண் நர்மதா என்ற பெண்ணை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே காதலில் தோல்வி அடைந்த இவர் பெற்றோர் பார்த்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவரிடம் தொகுப்பாளர்,”நீங்கள் தெருச்சண்டை போட்டது உண்டா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஆமாம். ஸ்கூல் படிக்கும்போது டியூஷன் போகும்போது நான் லவ் பண்ணுன பொண்ணை வேறு பையன் சைட் அடிச்சான். அதை பார்த்து கோபத்தில் நானும், என் நண்பனும் சேர்ந்து அவனிடம் சண்டை போட்டோம். என் நண்பனுக்கும் அவனுக்கும் அடிபிடி சண்டை ஆகிடுச்சு” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

8 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

8 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

8 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

8 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

8 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

8 மணத்தியாலங்கள் ago