மலையாள சினிமா திரை உலகில் இன்றும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் மம்மூட்டி. இவரின் ஒரே மகன் தான் நடிகர் துல்கர் சல்மான். இவரும் தனது தந்தையைப் போலவே சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் மற்ற நடிகர்களைப் போல கதையை தேர்வு செய்யாமல் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து அவரது ரசிகர்களை படத்தின் மூலம் பிரமிக்க வைத்து வருகின்றார்.இவர் என்னதான் சினிமாவில் வாரிசு நடிகராக இருந்தாலும் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது.
தனது அணுகுமுறை மற்றும் எதார்த்தமான பேச்சு ரசிகர்களை தாண்டி பலரையும் கவர்ந்துள்ளது.இவர் தமிழ் சினிமாவில் வாயை மூடி பேசவும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் பெரிய அளவிற்கு வசூல் பெற விட்டாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி படத்தை கொடுத்தார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பை வெகுவாக பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
கடந்த ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் முன்னணி நடிகராக திகழ்ந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் தற்பொழுது தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ‘Gun and my Gulab’ என்று பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.