கேரளாவில் ஒரு முன்னணி நடிகை கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி நடந்த இந்த துயரமான நிகழ்வு தற்போது ஒன்பது ஆண்டுகளை எட்டியுள்ளது. மலையாள திரையுலகை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நடிகர் திலீப் உள்ளிட்ட பலரைச் சுற்றிய பல திருப்பங்களுடன் கூடிய நீண்ட சட்டப் போராட்டத்தை உருவாக்கியது. இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி கைது செய்யப்பட்டார்.
இவருடன் மேலும் சிலரையும் போலீசார் கைது செய்தனர். ஆரம்ப விசாரணையில் இந்த பலாத்கார சம்பவத்திற்கு பின்னணியில் ஒரு பெரிய சதித்திட்டம் இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தது. இது ஒரு சாதாரண கடத்தல் மற்றும் தாக்குதல் வழக்கு கிடையாது என்று அப்போது புரிந்தது. இந்த வழக்கில் நடிகர் திலீப் பெயர் முதலில் வெறும் வதந்திகளாக பரவிய நிலையில் அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் திலீப் சதி திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அவருடைய கைது மலையாள திரை உலகில் பரபரப்பை கிளப்பி இருந்தது. சுமார் 85 நாட்கள் சிறையில் இருந்த அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்ற வந்த நிலையில் குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி நடிகர் திலீப்பை விடுதலை செய்தது எர்ணாகுளம் நீதிமன்றம். இந்த சம்பவத்தில் ஆறு பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் திலீப் குமார் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஜனநாயகன். இந்த படம் வரும் பொங்கலுக்கு…
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் ஒதுக்கீடுகளில் சுமார் ரூ.1,020…
விஜய் தந்தையுடன் காங்கிரஸ் பிரமுகர் திடீரென சந்திப்பு நடத்தியது தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் 2026 ஆம்…
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளால் இண்டிகோ விமான சேவை ஏற்கனவே நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெரிதும்…
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு…
மலையேறும் பழக்கம் கொண்ட காதலனால் திட்டமிட்டு கிராஸ்க்லாக்னர் மலையில் கைவிடப்பட்டு பணியில் உறைந்து ஆஸ்திரேலிய பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை…