விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ் விவகாரம்.. பிரபல தயாரிப்பாளரை ஏமாற்றிய ராயன்.. அவரே வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!

By Nanthini on பங்குனி 31, 2025

Spread the love

இப்படியான நிலையில் தனுஷ் தன்னிடம் காசு வாங்கிக்கொண்டு கால் சூட் கொடுக்காமல் இழுத்தடிப்பது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை கிளப்பியுள்ளது. தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமானவர்தான் கதிரேசன். அதன் பிறகு தனுஷ் நடித்த ஆடுகளம் மற்றும் நையாண்டி போன்ற திரைப்படங்களை தயாரித்த இவர் 2023 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் என்ற திரைப்படம் மூலமாக இயக்குனராகவும் அறிமுகமானார். இப்படியான நிலையில் தனுஷ் தன்னிடம் முன்பணம் வாங்கிக் கொண்டு கால்ஷூட் கொடுக்காமல் இழுத்தடிப்பதாக அவர் புகார் அளித்தும் தனுஷ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

   

அந்த அறிக்கையில், ஆர் கே செல்வமணி அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் five star creation பங்குதாரர் என்ற முறையில் நான் கலந்துகொண்டு தனுஷ் எங்களிடம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு முன் பணம் பெற்றுக் கொண்டு இன்று வரை கால் சூட் தரவில்லை என்றும் அதனால் நாங்கள் அனுபவிக்கும் மன வேதனைகளையும் பதிவு செய்தேன். அதனைப் புரிந்து கொண்ட எங்களுடைய தயாரிப்பாளர்கள் சங்கம் தனுஷ் எங்கள் நிறுவனத்திற்கு படம் நடித்து தர வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே தாங்கள் குறுக்கிட்டு, DAWN Pictures ஆகாஷ் என் இட்லி கடை படப்பிடிப்பு நடக்க வேண்டும், மேலிடத்து உத்தரவு என்று கூறியதை மறந்திறோ? மேலும் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் எங்கள் நிறுவனத்திற்கு நியாயம் வாங்கி தருவதாக தாங்கள் எங்கள் சங்கத்தில் உறுதியளித்தீர்கள்.

   

S. Kathiresan

 

நாங்கள் புதிதாக படம் தயாரிக்கவில்லை, ஏற்கனவே தனுஷ் நடித்த பொல்லாதவன் மற்றும் ஆடுகளம் படங்களை தயாரித்த நிறுவனம் என்று தங்களுக்கு நினைவு கூறுகின்றேன். நீதி வழங்கத்தான் சங்கங்கள் உள்ளது, தங்களின் அரசியல் குறுக்கிட்டால் இன்று வரை எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. தொழிலாளர்களின் வலியை உணர்ந்த தாங்கள் வட்டிக்கு பணம் வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் வழியை எப்போது உணர்வீர்கள். தயாரிப்பாளர்களின் நலனை காக்க எங்கள் சங்கம் எடுக்கும் முயற்சிகளில் அரசியல் கலக்காமல் ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன்.

dhanush problem:மேலிடத்து உத்தரவா ?தனுஷ் கால்ஷீட் பிரச்சனையில்  இப்படியெல்லாம் நடந்துருக்கா ? தயாரிப்பாளர் அறிக்கை தயாரிப்பாளர்

அக்டோபர் 30ஆம் தேதிக்குள் நியாயம் கிடைக்கும் என்று என்னிடம் கூறிவிட்டு இன்று கதிரேசன் பிரச்சனை செய்கிறார் என சொல்வது தங்களுடைய தனிப்பட்ட காழ்புணர்ச்சியை காட்டுகின்றது. தயாரிப்பாளரின் நியாயம் அறியாமல் எப்படி உங்களால் இப்படி பொதுத்தளத்தில் மனசாட்சி இல்லாமல் பேச முடிகின்றது. எங்களது வலியை உணர்ந்து விரைவில் நியாயம் பெற்று தர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என கதிரேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.