தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வரும் பாவா லட்சுமணன் விஜயகாந்த் குறித்து பேசி இருக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்த பிரபலமானவர் பாவா லட்சுமணன். தமிழில் வின்னர், மாயி, கோவை பிரதர்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் காமெடி நடிகராக வலம் வந்தார். அதிலும் மாயி திரைப்படத்தில் வாமா மின்னல் என்ற இவர் பேசும் காமெடி இன்றளவும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றது. அதை தொடர்ந்து விமல், சிவா நடிப்பில் வெளிவந்த கலகலப்பு திரைப்படத்திலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் வடிவேலு உடன் இணைந்து ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சமீபத்தில் கால் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பல சினிமா பிரபலங்கள் இவருக்கு உதவி செய்து இவரை காப்பாற்றி இருந்தார்கள். இந்நிலையில் சமீபத்தில் சித்ரா லட்சுமணனுடன் பேட்டியில் பேசியிருந்த இவர் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்.
நடிகர் வடிவேலு வாழ் தான் நான் சினிமாவிற்குள் வந்தேன். நான் சினிமாவில் நடிப்பதற்கு முக்கிய காரணமே அவர்தான் என்று கூறியிருந்தார். அதை தொடர்ந்து பேசிய அவர் விஜயகாந்த் குறித்தும் சில விஷயங்களை பேசி இருந்தார். புது வசந்தம் திரைப்படத்தை முதல் காப்பி ரெடியான உடனே தயாரிப்பாளர் ஆபவனம், ஏவிஎம் சரவணன் ஆகியோரிடம் போட்டு காட்டினார்கள்.
எங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு கலையை வைத்து இந்த திரைப்படத்தை எடுத்திருக்கின்றோம். இதை பார்த்த ஆபவனம் சார் மற்றும் சரவணன் சார் இப்படத்தை பார்த்துவிட்டு இதை உடனே சேல்ஸ் பண்ணி விடாதீர்கள், மிகச் சிறந்த படம் நன்றாக வரக்கூடிய படம். 20 நாள் கழித்து சேல்ஸ் பண்ணுங்கள் என்று கூறியிருந்தார். அதேபோலவே அந்த படத்தை சேல்ஸ் பண்ணி சரவணன் சாருக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து ஒரு முறை விஜயகாந்த் சார் ஆர்பி சவுத்ரி அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்த உடனே அவரது காலில் பட்டென்று விழுந்து விட்டார். பின்னர் என்னை பார்த்து லக்ஷ்மணா நான் ஏன் அவர் காலில் விழுந்து கும்பிட்டேன் என்று தெரியுமா? அவர் ஒரு 600 பேருக்கு சோறு போடுகிறார். தமிழ் சினிமாவில் பலரையும் வாழ வைத்து வருகிறார். அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் அவர் ஒரு சேட்டு தான் ஆனால் ஹிந்தி படங்களை அதிகம் தயாரித்தது கிடையாது. தமிழ் சினிமாவில் தமிழ் படங்களில் எவ்வளவு கவனம் செலுத்துகிறார் தெரியுமா? அந்த மரியாதைக்காக தான் அவர் காலில் விழுந்து கும்பிட்டேன் என்று கூறினார்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…