Connect with us

58 வயசுல காதல் முறிவு.. இனிமே திருந்தலைன்னா நான் முட்டாள்.. குமுறும் நடிகர் பப்லு..!!

CINEMA

58 வயசுல காதல் முறிவு.. இனிமே திருந்தலைன்னா நான் முட்டாள்.. குமுறும் நடிகர் பப்லு..!!

 

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சீரியல் நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகர் என திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பப்லு. இவர் பாலச்சந்திரனின் நாடகங்களிலும் நடித்துள்ளார். நன்கு நடனம் ஆட கூடியவர். 58 வயதிலும் ஜிம்மிற்கு சென்று தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பீனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு கொண்ட ஒரு மகன் உள்ளார்.

   

இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்ட நிலையில் மகனை பப்லு தனியாக கவனித்து வந்தார். மகனுக்கு 25 வயது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தன்னை விட 30 வயது குறைவான ஷீத்தல் என்ற பெண்ணை காதலிப்பதாக பப்லு அறிவித்திருந்த நிலையில் பல இடங்களுக்கும் இருவரும் ஒன்றாக ஜோடியாக சென்றனர். அதேசமயம் அந்த பெண்ணுக்கு பப்லுவின் மகனின் வயது தான் இருக்கும். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியானது. அதனை உறுதி செய்யும் விதமாக ஷீத்தல் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இருந்து பப்லு உடனான படங்களை நீக்கிவிட்டார். அதுமட்டுமல்லாமல் பப்லு சமீபத்தில் தனது பிறந்த நாளையும் தனியாக கொண்டாடிய நிலையில் ரசிகர்கள் இதனை உறுதி செய்தனர்.

 

அதுமட்டுமல்லாமல் நாங்கள் இருவரும் திருமணமே செய்து கொள்ளவில்லை என்றும், பின் எப்படி பப்லுவை என்னுடைய கணவர் என்கிறீர்கள் என்ற ஷித்தல் இன்ஸ்டா பதிவு ஒன்றும் மற்றொரு பக்கம் பேசு பொருளாகியுள்ளது. மறுபக்கம் தன் வாழ்க்கையின் அந்தரங்கத்தை எல்லாம் பொது வெளியில் பேசியது எவ்வளவு பெரிய தவறு என்பதையும் வாழ்க்கையில் இவ்வளவு பட்டும் திருந்தவில்லை என்றால் தன்னைவிட ஒரு முட்டாள் இந்த உலகில் யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் பப்லு குமுறி வருகிறார்.

author avatar
Nanthini
Continue Reading
To Top