Connect with us

“ரொம்ப டயர்டு ஆயிடுச்சு.. 50 வயதில் ஓய்வெடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்”.. அருண் விஜயின் அக்கா அனிதா வெளியிட்ட பதிவு..

CINEMA

“ரொம்ப டயர்டு ஆயிடுச்சு.. 50 வயதில் ஓய்வெடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்”.. அருண் விஜயின் அக்கா அனிதா வெளியிட்ட பதிவு..

தமிழ் சினிமாவில் தலைமுறை தலைமுறையாக பலர் நடித்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர் தான் நடிகர் விஜயகுமார் இவர் 70 80’ஸ் கால கட்டங்களில் படங்களில் நடித்து வந்தார். அதைத் தொடர்ந்து இவரது மகன் அருண் விஜய் தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாக அசத்தி வருகிறார். அருண் விஜயின் மகனும் தற்போது சினிமாவில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விஜயகுமாரின் முதல் மனைவி முத்துகண்ணு இவர் கடந்த 1969ல் விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு பிறந்தவர்தான் அருண் விஜய். அருண் விஜய் உடன் பிறந்தவர்கள் அனிதா, கவிதா. அனிதா கோகுலகிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார், அனிதாவும் ஒரு டாக்டராவர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்.

   

 

இவரது மகள் தியாவிற்கு கடந்த சில மாதத்துக்கு முன்பு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய அனிதா. நேற்று திடீரென்று ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது பலரும் ஆசைப்படும் பலரின் கனவாக இருக்கும் ஒரு வேலையில் நான் இருந்தேன். ஆனாலும் தற்போது ஒரு தைரியமான முடிவை எடுத்து அதிலிருந்து வெளியேறியுள்ளேன்.

என் வாழ்க்கையின் முதல் பாதியில் நான் கடினமாக உழைத்தேன். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஓடி விட்டது. ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்தேன். குடும்பம், வேலை இரண்டையும் சிறப்பாக செய்தேன். நான் 50 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று முடிவு செய்தேன். அது ஒரு தைரியமான முடிவு. அதனை நான் இப்போது எடுத்து உள்ளேன் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் பல உணர்ச்சிகரமான பதிவை வெளியிட்டு இந்த வேலையிலிருந்து வெளியேறுவதை குறித்து பகிர்ந்திருந்தார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Anitha Vijayakumar (@anits1103)

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top