இன்று மாலை 4:46க்கு அரசியல் களத்தில் அதிர்வலை ஏற்படுத்தும் அறிவிப்பு வரும்.. நடிகர் பார்த்திபன் பதிவால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு..!!!

By Divyamayakannan on புரட்டாதி 13, 2025

Spread the love

சென்னை, நடிகர் மற்றும் இயக்குனருமான பார்த்திபன் அவர்கள் தனுஷ் இயக்கத்தில் ‘இட்லி கடை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது இட்லி கடையில் நான் ஒரு மினி இட்லி, மிஸ்டர் தனுஷ் உடன் பணியாற்றிய முதல் அனுபவம். இந்தக் கால அவகாசத்தில் நான் அவரை மிகவும் ரசித்தேன் ன்று கூறியிருந்தார். இந்த நிலையில் பார்த்திபன் அவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். ரசிகர்களை பதற வைக்கும் முறையில் உள்ளது.

பார்த்திபன் அவர்கள் வெளியிட்ட பதிவில் இன்று மாலை 4:46 க்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது. உஷார்..! என்று கூறியிருந்தார். பலரும் பதிவுக்கு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் பார்த்திபன் அவர்கள் அரசியலுக்கு வருவாரோ? என்றும், பலர் அப்படி என்ன அறிவிப்பாக இருக்கும் என்றெல்லாம் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். தற்போது சமூக வலைத்தளத்தில் பார்த்திபன் அவர்களின் பதிவு வைரலாகி வருகிறது.