சூர்யாவின் படத்தை பார்த்துவிட்டு இயக்குனருக்கு போன் போட்ட அஜித்.. அப்போ அடுத்த படம் அவருடன் தானா..?

By Mahalakshmi on மே 28, 2024

Spread the love

நடிகர் அஜித், சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தை பார்த்துவிட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க முடிவெடுத்து இருக்கின்றாராம். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் அஜித்.

   

தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வரும் அஜித் அதைத்தொடர்ந்து ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அஃலி திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. விடாமுயற்சி திரைப்படம் நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் அந்த படத்தின் சூட்டிங் தள்ளி வைத்துவிட்டு தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் தான் முழு முயற்சியுடன் அவர் நடிக்க இருக்கின்றார் என்று தொடர்ந்து தகவல் வெளியாகி இருக்கின்றது.

   

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் நடிகர்கள் காம்போ ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும். அப்படி ஒரு காம்போவாக அஜித் சிறுத்தை சிவா இருவரும் இருந்தனர். வீரம், வேதாளம், விஸ்வாசம், விவேகம் என தொடர்ந்து நான்கு திரைப்படங்கள் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ளார்.

 

இந்த படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து அஜித் ஒரே இயக்குனர்களின் திரைப்படத்தில் நடிப்பது அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்திய காரணத்தினால் அடுத்தடுத்து வேறு இயக்குனர்களுடன் கைகோர்த்து படங்களை இயக்கி வருகின்றார்.

சிறுத்தை சிவா தற்போது சூர்யாவை வைத்து கங்குவா என்கின்ற பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். மிகப்பெரிய பொருட்ச அளவில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தை கிரீன் ஸ்டுடியோ சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்து வருகின்றார்.  இந்த படத்தை பல மொழிகளில் டப்பிங் செய்து உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றார்கள்.

இந்த திரைப்படத்தை பார்த்த அஜித் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தை முடித்தவுடன் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.