தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து அசத்தியவர் நடிகர் அஜய் ரத்னம். பல படங்களில் போலீஸ் அதிகாரி டாக்டர் போன்ற கேரக்டர்களிலும் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அஜய் ரத்னம் கூறியதாவது, விஜயகாந்த் சார் 100 படம் பண்ணியிருக்கார். அந்த 100 படத்துக்கும் ஒரே கேமராமேன் ராஜராஜன் தான். ஒரே மேக்கப் மேன் தான். அதே மேனேஜர் தான். அதே காஸ்டியூமர் தான். ஒரே குடும்பம் தான்.
அந்த மாதிரி தான் மக்களை அவர் லவ் பண்ணினார். விஜயகாந்த் சார் எப்படின்னா எம்ஜிஆர் சாருக்கு அப்புறம் அவரோட படத்துல எல்லாருக்கும் ஒரே சாப்பாடு தான். கறி மீன் கோழி இல்லாம சாப்பாடு கிடையாது. சூட்டிங் ஸ்பாட்டில் கிண்டல் பண்ணீட்டு எல்லார்கூடயும் விளையாடீட்டு இருப்பார். அதனால்தான் அவருக்கு பெயர் கேப்டன். அது சும்மா ஒண்ணும் வராது. ஏதாவது பண்ணினால் தான் வரும் என்று அஜய் ரத்னம் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
