நடிகை சாய் தன்ஷிகா மனதோடு மழைக்காலம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். எதிர்பார்த்த அளவு அவரது கதாபாத்திரம் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை.
ஜெயம் ரவியின் பேராண்மை படத்தில் ஜெனிஃபர் என்ற கதாபாத்திரத்தில் சாய் தன்ஷிகா நடித்தார். இதன் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இதனை தொடர்ந்து மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான், பரதேசி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
பரதேசி திரைப்படத்திலும் சாய் தன்ஷிகாவின் கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு கடந்த 2016-ஆம் ஆண்டு கபாலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக போல்டான கதாபாத்திரத்தில் நடித்தார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சாய் தன்சிகா அவ்வபோது போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை வெளியிடுவார்.
தற்போது கடற்கரையோரம் நின்று கொண்டு மார்டன் உடையில் சாய் தன்ஷிகா வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.