Categories: சினிமா

பாலச்சந்தர் தன்னுடைய அதிக படங்களுக்குப் பயன்படுத்திய இசையமைப்பாளர்… வி குமார் பற்றி பலரும் அறியாத தகவல்கள்!

Spread the love

தமிழ் சினிமாவில் எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் எப்போதும் இரு துருவங்கள் கோலோச்சுவார்கள். ஒரு பக்கம் எம் ஜி ஆர் என்றால் மற்றொரு பக்கம் சிவாஜி. ஆனால் இவர்களுக்கு நடுவில் ஜெமினி கணேசனும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார்.

அதுபோல கே வி மகாதேவன் மற்றும் எம் எஸ் விஸ்வநாதன் ஆகியோர் தங்கள் இசையால் தமிழ் ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்த போதுதான் வி குமார் பாலச்சந்தரின் நீர்க்குமிழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அது முதல் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழி படங்களுக்கு இசையமைத்த அவரை ரசிகர்கள் ‘மெல்லிசை மாமணி’என்ற பட்டம் கொடுத்து அழைக்க ஆரம்பித்தனர்.

சென்னை ராஜதானியில் 1934 ஆம் ஆண்டு தெலுங்கு குடும்பம் ஒன்றில் வரதராஜுலு குமார் பிறந்தார். இசையில் கொண்ட ஆர்வம் காரணமாக அதைக் கற்றுக்கொண்டு மேடை நாடகங்களுக்கு இசையமைத்தார். அப்படிதான் அவருக்கு பாலச்சந்தரோடு பழக்கம் ஏற்பட்டு அவரால் சினிமாவுக்கு அழைத்து வரப்பட்டார்.

பாலச்சந்தர் தன்னுடைய படங்களில் அதிகமாக இசையமைப்பாளராக பயன்படுத்தியது குமாரைதான். குமார் ஏ ஆர் ரஹ்மானின்  தந்தை சேகரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். அதே போல  சேகர் இவருக்கு ப்ரோகிராமராக வேலை பார்த்துள்ளார்.

1991 ஆம் ஆண்டு வரை பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த குமார் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.  பல ஜானர்களில் இசையமைத்துள்ள குமாரின் ஹிட் பாடல்களாக ‘தாமரை கண்ணங்கள்’. ‘காதோடுதான் நான் பேசுவேன்’, அடுத்தாத்து அம்புஜத்த, வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல்  போன்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடல்களாக அமைந்துள்ளன.

vinoth

Recent Posts

ரொம்ப ஆட்டம் போட்ட இப்படித்தான் ஆகும்…! போதையில் கார் மேல் ஏறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த ஷாக்… திட்டி தீர்க்கும் இணையவாசிகள்..!!

மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…

13 minutes ago

பதைபதைக்கும் வீடியோ..! மரத்தில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு… உடலில் மிளகாய்ப் பொடி தூவி ரத்தம் சொட்டச் சொட்ட கொடூரம்.. பழைய பகையை தீர்க்க இப்படியொரு கொடூரமா??

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…

17 minutes ago

“அம்மா துடிதுடிக்க செத்ததை பார்த்தேன்” குழந்தையின் கண்முன்னே… தாயை கொன்று தூக்கிலிட்ட கொடூரம்… வரதட்சணைக்காக இப்படியா..? சிறுவனின் பகீர் வாக்குமூலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…

20 minutes ago

“சீனாவுக்கு நான் தரும் கிப்ட்” அதிபர் ஷி ஜின்பிங் என்னைக் கட்டிப்பிடித்து வரவேற்பார்… ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் போட்ட ‘மாஸ்’ பதிவு..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…

33 minutes ago

“டேய் திரும்பிப் பாக்காம ஓடுங்கடா” மனிதர்களே தேவையில்லை… தானாகவே காட்டுப்பன்றிகளை விரட்டும் ரோபோ… வைரலாகும் வீடியோ இதோ..!!

போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…

40 minutes ago