தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் பூர்ணம் விஸ்வநாதன். சிறுவயதில் இருந்தே தமிழ் நாடகங்களில் ஈர்க்கப்பட்ட பூர்ணம் விஸ்வநாதன் தனது 18 வயதில் மேடைகளில் நடிக்க தொடங்கினார். பின்னர் சில வருடங்கள் புதுடில்லிக்கு சென்று நடனம் மற்றும் இசை விமர்சகர் சுப்புடுவுடன் தெனிந்திய குழுவில் ஒரு பகுதியாக இருந்தார்.

இது மட்டுமல்லாமல் பூர்ணம் விஸ்வநாதன் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். 1964 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார் பூர்ணம் விஸ்வநாதன். தனி குடித்தனம் ஊர் வம்பு மற்றும் கால் கட்டு போன்ற நாடகங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்களால் பெரும் பாராட்டுகளை பெற்றார். நாடகங்களில் நடித்துக் கொண்டே சென்னையில் உள்ள பத்திரிக்கை தகவல் பணியகத்தின் உதவி தகவல் அதிகாரியாக பணியாற்றினார் பூர்ணம் விஸ்வநாதன்.
பின்னர் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட யோஜனா இதழ்களின் ஆசிரியர் மற்றும் மூத்த நிருபராக பணியாற்றினார் பூர்ணம் விஸ்வநாதன். பல நாடகங்களையும் சிறுகதைகளையும் எழுதி உள்ளார் பூர்ணம் விஸ்வநாதன். 1968 ஆம் ஆண்டு உயர்ந்த மனிதன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பூர்ணம் விஸ்வநாதன்.
தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானார் பூர்ணம் விஸ்வநாதன். ராஜபார்ட் ரங்கதுரை, குரு, மூன்றாம் பிறை, பயணங்கள் முடிவதில்லை, வருஷம் 16, மகாநதி, சிறைச்சாலை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் பூர்ணம் விஸ்வநாதன்.

பூர்ணம் விஸ்வநாதன் தனது வித்தியாசமான உடல் மொழியும் குரல் மாடுலேஷன்காக பிரபலமானார். இது மட்டுமல்லாமல் இவரை பற்றி பலரும் அறியாத விஷயம் என்னவென்றால் அகில இந்திய வானொலியில் பணியாற்றியபோது 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த அந்த செய்தியை முதல் செய்தி தொகுப்பில் வானொலியில் அறிவித்தது பூர்ணம் விஸ்வநாதன் அவர்கள் தான் என்பது பலருக்கும் தெரியாது. இது அவர் இருந்த வரையிலும் தனக்கு கிடைத்த பாக்கியம் பெருமைக்குரிய விஷயம் என்று கூறிக் கொண்டே இருப்பாராம்.
