#image_title
பேரரசர்கள் பேராட்சியை நடத்திய மன்னர்கள் கோட்டைகளை கட்டாயம் தங்களது ஆட்சி காலத்தில் கட்டியிருப்பார்கள். அவர்களின் பாதுகாப்புக்காக வலிமையான கோட்டையை கட்டியிருக்கிறார்கள். இந்த கோட்டைகள் போர்களின்போது எதிரிகளை எளிதில் முன்னேறுவதை தடுக்கின்றன. அதுபோன்று கட்டப்பட்டது தான் வட்ட கோட்டை கோட்டை. பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சியின் போது கடலோர பாதுகாப்பை மனதில் கொண்டு கட்டப்பட்ட ஒரு கம்பீரமான கோட்டை தான் இந்த வட்டக்கோட்டையாகும்.
தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் வட்டக்கோட்டை இருந்தாலும் திருதாங்கூர் மன்னர்களால் கட்டப்பட்ட வட்டகோட்டை அவர்களது முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மன்னராக இருந்த மார்த்தாண்ட வர்மா இந்த கோட்டையை கட்டினார். கன்னியாகுமரியின் வடகிழக்கில் சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வட்டகோட்டை முழுவதும் கல்லால் ஆனது. 3.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த கோட்டையில் ஓய்வறைகள், ஆயுத அறை, கண்காணிப்பு கோபுரங்கள் ஆகியவனை இருக்கின்றன.
இந்த கோட்டையின் சுவர்களின் உயரம் 25 அடி இருக்கும் மற்றும் முன்புறத்தில் இருக்கும் கோட்டையின் சுவர் சுமார் 29 அடி தடிமன் கொண்டது. இந்த கோட்டையில் இருக்கும் அரண்மனைக்கடியில் நான்கு அடி அகலத்தில் ஒரு சுரங்கபாதை வழியாக செல்லக்கூடிய ஒரு ரகசிய வழி இருக்கிறது. அந்த சுரங்க பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. ஏராளமான திறந்த வெளிகள் தோட்டங்கள் நடுவில் ஒரு குளம் என அழகான முறையில் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது.
கடலுக்கு அருகில் கம்பீரமாக இருக்கும் இந்த கோட்டையை பார்க்கும் அழகு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். கன்னியாகுமரிக்கு நீங்கள் எப்போது சுற்றுலா சென்றாலும் மறக்காமல் இந்த வட்டக்கோட்டையை சென்று பார்த்துவிட்டு வாருங்கள். மன்னர் காலத்தில் போர் நேரத்தில் எப்படி அவர்கள் சமாளிப்பார்கள் அவர்கள் யுக்தி என்ன போன்றவை அங்கு செல்லும்போது நமக்கு தெரியும்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…