CSK-வ வச்சு செய்த அபிஷேக் சர்மாவின் அம்மா.. சேப்பாக்கத்தில் மாஸ் காட்டிய ‘விசில் போடு’ சைகை… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

By Swetha on வைகாசி 19, 2026

Spread the love

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு, ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவின் தாய் அஞ்சலி சர்மா மைதானத்தில் இருந்த ரசிகர்களை நோக்கிச் செய்த கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அணியின் புகழ்பெற்ற “விசில் போடு” சைகையை, அபிஷேக் சர்மாவின் தாய் சென்னை ரசிகர்களைப் பார்த்து கிண்டல் செய்யும் விதமாக செய்து காட்டினார். ஹைதராபாத் அணியின் மிரட்டலான வெற்றிக்குப் பிறகு, மைதானத்தில் அமைதியாக அமர்ந்திருந்த சென்னை ரசிகர்களை நோக்கி அவர் இவ்வாறு சவால் விடும் வகையில் கைகளை அசைத்துக் கொண்டாடினார்.

   

“ஆன்ட்டிக்கு கோபமே வராதா?” (Aunty got no chill) என்ற வாசகத்துடன் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. சென்னை ரசிகர்களின் சொந்த பாணியிலேயே அவர்களுக்குப் பதிலடி கொடுத்த அபிஷேக் சர்மாவின் தாயாரின் இந்தத் துணிச்சலான கொண்டாட்டத்தை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து, தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.