உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தீப் என்பவரது மனைவி பிரியங்கா சில காலத்திற்கு முன்பு காணாமல் போனார். தனது மனைவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தீப் கருதிய நிலையில், எதிர்பாராத விதமாக ஒரு ஆதார் அப்டேட் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரியங்கா தனது ஆதார் அட்டையைப் புதுப்பிக்க முயன்றபோது, அதற்கான ஒருமுறை கடவுச்சொல் (OTP) சந்தீப்பின் மொபைல் எண்ணிற்குச் சென்றுள்ளது. இதன் மூலம் தனது மனைவி உயிருடன் இருப்பதையும், அவர் ராஜஸ்தானில் வசித்து வருவதையும் சந்தீப் கண்டறிந்தார்.
விசாரணையில், காணாமல் போனதாகக் கருதப்பட்ட பிரியங்கா, வீட்டை விட்டு வெளியேறி ராஜஸ்தானில் வேறொரு நபருடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கி குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. பல ஆண்டுகளாகத் தனது மனைவி இறந்துவிட்டதாக நினைத்து வந்த கணவருக்கு, நவீனத் தொழில்நுட்பமான ஆதார் பெரும் அதிர்ச்சியையும் அதே சமயம் உண்மையையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த வினோதமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…