இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இதனால் பிறந்த குழந்தை முதல் அனைவருமே ஆதார் கார்டு வைத்திருக்கின்றனர். அதே சமயம் புதிய ஆதார் கார்டு மற்றும் ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கு இ சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மையங்களை மக்கள் நாடுகிறார்கள். சமீபத்தில் ஆதார் ஆதார் கார்டு அப்டேட் செய்வதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் 7 முதல் 15 வயது குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி அடுத்த ஒரு வருடம் அமலில் இருக்கும். இதன் மூலம் பயோமெட்ரிக் விவரங்களை ஆதாரில் இலவசமாக சேர்க்கலாம். இதற்கு முன்பு இந்த விவரங்களை முதல் முறை சேர்ப்பதற்கு மட்டும் இலவசம் என்று இருந்தது. அதேபோல கடந்த அக்டோபர் 1 முதல் ஆதார் சேவை கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் மேற்கூறிய விவரங்களை சேர்க்க 125 ரூபாய் செலுத்த வேண்டும்.
