“ரயில் டிக்கெட் புக் பண்ண போறீங்களா…?” இது இல்லையென்றால் இனி வேலையே நடக்காது…! வெளியான முக்கிய தகவல்…!!

By Devi Ramu on தை 7, 2026

Spread the love

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. டிக்கெட் புக்கிங்கில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, ஐஆர்சிடிசி (IRCTC) கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக, தற்போது காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இணையதளம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் விவரங்கள் அவசியமாக்கப்பட்டுள்ளன.

ஆதார் இணைக்கப்படாத கணக்குகள் மூலம் தட்கல் சேவைகளைப் பயன்படுத்த முடியாது என்பதோடு, வரும் 12-ஆம் தேதிக்குப் பிறகு இந்த விதிமுறை இன்னும் தீவிரப்படுத்தப்பட உள்ளது. அதாவது, ஆதார் சரிபார்ப்பு முடிந்த பயனர்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். எனவே, கடைசி நேரத் தவிப்புகளைத் தவிர்க்க பயணிகள் தங்களது ரயில்வே கணக்கை உடனடியாக ஆதாருடன் இணைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.