டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் மற்றும் மாணவர்கள் ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜூலை 20 அன்று போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி பேரணியைக் கலைத்த சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளையும் மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மும்பையைச் சேர்ந்த அனுஜ் ராவத் என்பவர் நெகிழ்ச்சியான ஒரு காரியத்தைச் செய்துள்ளார். சுமார் 1,500 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள மும்பையில் இருந்தபடியே, டெல்லி ஜந்தர் மந்தரில் போராடும் மாணவர்களுக்காக Zomato செயலி மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
அந்த உணவு பார்சலின் குறிப்பில், “ஜந்தர் மந்தரில் பசியோடு இருக்கும் யாருக்காவது இந்த உணவை தயவுசெய்து கொடுத்துவிடவும்” என்று அவர் எழுதியிருந்தார். இதைப் பெற்ற Zomato டெலிவரி ஊழியர், அந்தப் போராட்டக் களத்தில் உள்ளவர்களிடம் குறிப்பைச் சத்தமாக வாசித்து உணவை வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அனுஜ் ராவத்தின் இந்த மனிதநேயமிக்க செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, அமைச்சர் என். ஆனந்துக்கு எதிராக ஏற்கெனவே வழக்கு தொடர்ந்த தமிழக வெற்றிக்…
கர்நாடக மாநிலம் சுள்ளியா பகுதியில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான பாத்திமத் நிஷானா என்ற பெண் குடும்பத் தகராறு மற்றும்…
ஊழலற்ற நிர்வாகமே இலக்கு எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்து வரும் நிலையில், அவர் வசம் உள்ள…
திமுக எம்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று சந்திக்காதது கட்சியினரிடையே…
அதிமுகவிற்குள் உட்கட்சிப் பூசல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதை உணர்த்தும் வகையில் முக்கிய மூத்த தலைவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளுடன்…
ஓலைக்குடா அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள…