இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்ற மோகத்தில், மக்கள் தங்களது உயிரையே பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ரபினா தேவி (@rabinadevi55) என்ற பெயரிலான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோ காண்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதில் ஒரு பெண் தரையில் படுத்துக்கொண்டு, தனது இரண்டு கால்களையும் மேலே தூக்கி, அதன் பாதங்களின் மீது எரியும் மண்ப அடுப்பை வைத்துச் சமநிலைப்படுத்துகிறார்.
அந்த எரியும் அடுப்பின் மீது ஒரு கடாய் வைக்கப்பட்டு, அதில் ஏதோ ஒரு உணவு சமைக்கப்படுவதையும் வீடியோவில் காண முடிகிறது. மற்றொரு பெண் இந்த முழுச் செயலையும் வீடியோவாகப் பதிவு செய்து கொண்டிருக்கிறார். ஒரு சிறிய தவறு நடந்தால் கூட, எரியும் அடுப்பும் கொதிக்கும் உணவும் அந்தப் பெண்ணின் முகம் அல்லது உடல் மீது விழுந்து கடுமையான தீக்காயங்களை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய உயிரைப் பறிக்கும் ஆபத்து இருந்தும், வெறும் ‘லைக்குகள்’ மற்றும் பார்வைகளுக்காக இந்த விபரீத செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
View this post on Instagram
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, இணையவாசிகள் பலரும் அந்தப் பெண்ணின் முட்டாள்தனமான செயலைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “சமூக வலைதள வைரல் மோகம் மக்களை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பதற்கு இதுவே சாட்சி” என்றும், “சில வினாடி புகழுக்காக வாழ்க்கையைத் தொலைக்க வேண்டாம்” என்றும் பலரும் எச்சரித்து வருகின்றனர். இத்தகைய ஆபத்தான ஸ்டண்டுகளை யாரும் வீட்டில் முயற்சி செய்ய வேண்டாம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
