பில்லி, சூனியம் வைத்த விவசாயி… துடிதுடித்து உயிரிழந்த பெண்… காட்டுக்குள் பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலம்… திடுக்கிடும் சம்பவம்…!

By Nanthini on தை 5, 2026

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டம் அருகே உள்ள மகாநகர் பகுதியை சேர்ந்த சந்தன் (21). இவர் குடும்பத்துடன் தங்கி விவசாயம் செய்து வரும் நிலையில் அதே பகுதியில் சந்தன் வீட்டுக்கு அருகில் சுசில் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாந்திரீகம் போன்றவற்றில் அதிக நம்பிக்கை உடையவர் என்று சொல்லப்படும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுசிலின் தாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்து உள்ளார். இது தொடர்பாக சுசில் அருகே இருந்த ஒரு மாந்திரீகவாதியிடம் கேட்டுள்ளார்.

அப்போது அவர் சந்தன் குடும்பத்தார் தான் சுசிலின் தாய்க்கு பில்லி சூனியம் வைத்திருப்பதாகவும் அதனால் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பி ஆத்திரமடைந்த சுசில் இது பற்றி தனது நண்பர்களிடம் கூறி சந்தனை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி சந்தனை பேசி காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். போதை தலைக்கேறிய சந்தனை சுசில் மற்றும் அவருடைய நண்பர்கள் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளனர். அதன் பிறகு அவருடைய உடலை பெட்ரோல் ஊற்றி அங்கேயே எரித்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.

   

மறுநாள் காட்டுப் பகுதிக்குச் சென்ற ஆடு மேய்க்கும் சிலர் சந்தனின் பாத எரிந்த உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது தலைமறைவாக இருந்த சுசிலை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாந்திரீகவாதி சொன்னதை நம்பி சந்தனை சுசில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் மூடநம்பிக்கையால் ஒரு விவசாயியின் உயிர் பரிபோன சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது