ராஜஸ்தான் மாநிலம் ராவத்பாட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமி ஒருவரின் வினோதச் செயல் அங்கிருந்தவர்களை உறைய வைத்துள்ளது. உடல்நலக்குறைவால் வார்டில் சிகிச்சை பெற்று வந்த அந்தச் சிறுமி, திடீரென சுவர்களில் ஏற முயன்றதோடு விசித்திரமான சத்தங்களையும் எழுப்பியுள்ளார். ஹாரர் திரைப்படக் காட்சி போல அந்தச் சிறுமி செய்த இந்த மிரட்டலான காரியங்கள் அங்கிருந்த நோயாளி மற்றும் உறவினர்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த பலரும், அந்தச் சிறுமிக்கு பேய் பிடித்துள்ளதாகக் கூறி வருகின்றனர். ஆனால், மருத்துவம் மற்றும் மனநல நிபுணர்கள் இது தீவிரமான மனநலம் சார்ந்த பாதிப்பாகவோ அல்லது நரம்பியல் கோளாறாகவோ இருக்கலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். ஆன்மீக ரீதியான நம்பிக்கைகளுக்கும் அறிவியல் ரீதியான காரணங்களுக்கும் இடையே இந்தச் சம்பவம் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…