ராஜஸ்தான் மாநிலம் ராவத்பாட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமி ஒருவரின் வினோதச் செயல் அங்கிருந்தவர்களை உறைய வைத்துள்ளது. உடல்நலக்குறைவால் வார்டில் சிகிச்சை பெற்று வந்த அந்தச் சிறுமி, திடீரென சுவர்களில் ஏற முயன்றதோடு விசித்திரமான சத்தங்களையும் எழுப்பியுள்ளார். ஹாரர் திரைப்படக் காட்சி போல அந்தச் சிறுமி செய்த இந்த மிரட்டலான காரியங்கள் அங்கிருந்த நோயாளி மற்றும் உறவினர்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த பலரும், அந்தச் சிறுமிக்கு பேய் பிடித்துள்ளதாகக் கூறி வருகின்றனர். ஆனால், மருத்துவம் மற்றும் மனநல நிபுணர்கள் இது தீவிரமான மனநலம் சார்ந்த பாதிப்பாகவோ அல்லது நரம்பியல் கோளாறாகவோ இருக்கலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். ஆன்மீக ரீதியான நம்பிக்கைகளுக்கும் அறிவியல் ரீதியான காரணங்களுக்கும் இடையே இந்தச் சம்பவம் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
यह किसी भूतिया फिल्म का सीन नहीं बल्कि हकीकत है।
वीडियो राजस्थान के रावतभाटा हॉस्पिटल का हैं जहां एक 14 वर्षीय लड़की को बीमार होने पर भर्ती कराया गया !
इलाज के दौरान उसे वार्ड में कुछ अजीबो गरीब हरकत करते हुए कैमरे में कैद किया गया
लड़की दीवार पर पर चढ़ने की कोशिश कर रही थी… pic.twitter.com/BckAKvbMfG
— Najir Hussain (@Najir_Hussain88) April 26, 2026
