மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த மங்கர்ணா என்ற பெண்மணியை, புதர்களுக்குள் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று மின்னல் வேகத்தில் தாக்கியது. அந்தச் சிறுத்தை அப்பெண்ணின் கழுத்தைப் பதம் பார்க்க முயன்றபோது, அன்று நிலவிய கடும் குளிருக்காக அவர் கழுத்தில் சுற்றியிருந்த தடிமனான சால்வை பெரும் கேடயமாக மாறியது. சிறுத்தையின் கூர்மையான பற்கள் பெண்ணின் சதையைத் துளைக்க முடியாமல் அந்தத் துணியிலேயே சிக்கிக் கொண்டதால், அவர் இமைக்கும் நேரத்தில் மரணத்தின் பிடியில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினார்.
மங்கர்ணாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், மிரண்டு போன சிறுத்தை புதருக்குள் ஓடி மறைந்தது. காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து வனத்துறையினர் அந்தப் பகுதியில் கேமராக்களை பொருத்தி சிறுத்தையைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒரு சாதாரண துணி ஒருவரது உயிரைக் காக்கும் கவசமாக மாறியுள்ள இந்த விசித்திரமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை அருகே 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து…
பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவி அபினிஷா, நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 495…
சொந்தத் தாயாலேயே பல ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மகன் ஒருவன், அந்தத் தாய்க்குப் பிறந்த இளைய குழந்தைக்குத் தானே…
பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட நிதி அமைப்புகளுக்கு மத்திய நிதியமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எரிபொருள் சிக்கன நடவடிக்கை மற்றும் தேவையற்ற…
தென்னாப்பிரிக்காவின் வெல்வர்டீன்ட் பகுதியில், 37 வயதான ஹியூகோ ஃபெரைரா தனது 8 நாள் பெண் குழந்தையை மிகவும் கொடூரமாகப் பாலியல்…
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே, பெற்றோர்கள் கூலி வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த 8 வயது…