சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், பெண் ஒருவர் வாடிய வெள்ளரிக்காய்களைப் பசுமையாகக் காட்டுவதற்காக, அவற்றை செயற்கை பச்சை நிறச் சாயத்தில் முக்கி எடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. “இன்னும் ஆர்கானிக் உணவுகளைத் தேடுங்கள்” என்ற கிண்டலான தலைப்புடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, சந்தைகளில் விற்கப்படும் காய்கறிகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்துப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த இரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். இரயில் நிலையப் பகுதிகளில் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டிருந்த வியாபாரிகளைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்துள்ளனர். காய்கறிகள் புதியதாகத் தெரிவதற்காகப் பயன்படுத்தப்படும் இத்தகைய ரசாயனச் சாயங்கள் மனித ஆரோக்கியத்திற்குப் பெரும் தீங்கு விளைவிக்கக்கூடியவை என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
देख रहे हैं @RailMinIndia जी –
बिहार के कटिहार रेलवे स्टेशन पर खुलेआम यात्रियों की ज़िंदगी से खिलवाड़ हो रहा है। सैकड़ों रेल कर्मचारियों और दर्जनों रेल पुलिसकर्मियों की मौजूदगी में ये खीरा बेचने वाली महिलाएं यात्रियों के खून में ज़हर घोल रही हैं, लेकिन पूरा रेलवे प्रशासन और… pic.twitter.com/qMxrJBqbMa
— NCIB Headquarters (@NCIBHQ) May 8, 2026
பொதுமக்கள் காய்கறிகளை வாங்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், அவற்றைச் சமைப்பதற்கு முன் நன்கு கழுவிப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களிலும் சோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
