கார்ப்பரேட் துறையில் நிலவும் கடுமையான பணிச்சுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக, அதிக சம்பளம் தரும் ஐடி வேலையைத் துறந்துவிட்டு கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டுநராக மாறியுள்ள வீடியோ இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது. சுமார் 9 ஆண்டுகள் கார்ப்பரேட் வாழ்க்கையில் பயணித்த அவர், அங்கு நிலவிய தொடர் அழுத்தங்கள் காரணமாக நிம்மதியை இழந்துள்ளார். இதனால் தனது உயர் பதவியையும், கைநிறைய வந்த சம்பளத்தையும் உதறிவிட்டு, வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ஓட்டும் தொழிலைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
தற்போது ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிவது தனக்கு முழு சுதந்திரத்தையும், மன நிறைவையும் தருவதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய தொழிலின் மூலம் அவர் தற்போதும் மாதம் சுமார் ரூ.60,000 வரை வருமானம் ஈட்டி வருகிறார். ஆடம்பரமான கார்ப்பரேட் வாழ்க்கையை விட, நிம்மதியான மன அமைதியே வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்பதை உணர்த்தும் இவரது முடிவு, பலருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
மின்துறை தலைமை அலுவலகத்தில் 18 ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து முறையான சிபிஐ விசாரணை…
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நாளை மதியம் 12 மணிக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக நேரலையில் தோன்றி முக்கிய…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஒரு இயக்கம் மற்றொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்பதில் தான்…
இந்தியாவின் மிகப்பெரிய பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மதர் டெய்ரி, சுமார் 4 ஆண்டுகால தீவிர ஆராய்ச்சிகளுக்குப் பின்னர்,…
திருமணமான முதல் இரவே போர்க்களமாக மாறிய ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு அறையில்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வேடிக்கையான வீடியோவில், ஒரு மாந்தோட்டத்தின் அருகே இரயில் ஒன்று தற்காலிகமாக நின்று கொண்டிருக்கிறது.…