திருச்சி நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஜெயந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயந்தியின் இளைய மகள் தனது தலைமுடிக்கு ‘ஹேர் கலரிங்’ செய்துகொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயந்தி மகளைக் கண்டித்த நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மகள் வீட்டில் இருந்த பாத்திரங்களை அடித்து உடைத்ததால், மிகுந்த மனவேதனையடைந்த ஜெயந்தி தனது அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவில் முக்கியப் பொறுப்பில் இருந்த ஜெயந்தி, அரசியலில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். பத்து ஆண்டுகளாகக் கணவரைப் பிரிந்து தனது இரு மகள்களுக்காக வாழ்ந்து வந்தவர், ஒரு சாதாரண குடும்பப் தகராறுக்காக இப்படி விபரீத முடிவெடுத்தது அனைவரையும் நிலைகுலைய வைத்துள்ளது.
தகவலறிந்து வந்த நவல்பட்டு போலீசார், ஜெயந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகளின் அடம்பிடிக்கும் குணம் மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் மன அழுத்தங்கள் இருந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…
மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…