வியட்நாமில் மனதை உருக்கும் ஒரு காதல் கதை சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 29 வயதான ஒரு இளைஞர், தனது நீண்ட கால காதலியான 24 வயது தோ (Tho) என்பவரை கரம்பிடித்தார். திருமணத்திற்குப் பிறகு மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விதி வேறு விதமாக விளையாடியது.
திருமணமான சில காலத்திலேயே, அவரது மனைவிக்குக் கடுமையான நுரையீரல் காசநோய் (Pulmonary Tuberculosis) பாதிப்பு ஏற்பட்டது. இந்த நோய் அவரது உடலைச் சிறிது சிறிதாக உருக்கி, அவரைப் படுக்கையிலேயே முடக்கியது. இருப்பினும், தனது மனைவியைக் கைவிட மறுத்த அந்த இளைஞர், அவரை அர்ப்பணிப்புடன் கவனித்துக் கொண்டார். மனைவியின் மருத்துவச் செலவுகளுக்காகப் பணத்தைச் சேமிக்க, அவர் சாப்பிட்டு மிஞ்சிய உணவையே தானும் உண்டு காலம் தள்ளினார்.
கையில் இருந்த சேமிப்பு முழுவதும் தீர்ந்த நிலையில், தனது மனைவியின் உயிரைக் காப்பாற்ற வேறு வழியின்றி அவர் சமூக வலைதளங்களின் உதவியை நாடினார். தனது மனைவியைக் காப்பாற்ற நிதியுதவி கோரி அவர் உருக்கமாக வெளியிட்ட பதிவுகள், தற்போது பலரது இதயங்களை நெகிழச் செய்துள்ளது. “காதல் என்பது இன்பத்தில் மட்டுமல்ல, துன்பத்திலும் துணை நிற்பதுதான்” என்பதற்கு இந்த தம்பதியினர் ஒரு வாழும் உதாரணமாக மாறியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…