#image_title
சிறு வயது முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது தின்பண்டங்கள். சூடான டீயுடன் வடை சமோசா பதார்த்தங்கள் வைத்து சாப்பிட்டால் சொர்க்கமே கண்முன் வரும். இந்த பிறப்பு தான் ருசித்து சாப்பிட கிடைத்தது என்பது போல பலர் விரும்பியதை சாப்பிட்டு வாழ வேண்டும் என்று நினைப்பர். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் வெளியில் கடையில் ஏதும் நம்பிக்கையோடு வாங்கி சாப்பிட முடியவில்லை.
அதற்கு காரணம் உணவில் கலப்படம். உணவில் கலப்படம் போக உணவை தயார் செய்யும் உணவகங்ளில் கெட்டுப் போன பழைய பொருட்களை வைத்து பதார்த்தங்களை தயார் செய்து பணத்துக்காக மக்களின் உடல் நலனோடு விளையாடுகிறார்கள். என்னதான் கடையை ஆக்கிரமித்து சீல் செய்து ஒரு பக்கம் நடந்தாலும் ஒரு பக்கம் எல்லாம் சரியாகி விட்டதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு இடத்திலும் உணவகங்களில் கலப்படம். சாப்பாட்டில் ஏதாவது பூச்சி போன்றவை விழுந்து கிடப்பது போன்றவை இருக்கத்தான் செய்கிறது. அதை ஒவ்வொரு நாளும் வீடியோ எடுத்து சமூகவலைதாளங்களில் போட தான் செய்கிறார்கள். அதேபோல் தற்போது சமோசாவை வைத்து ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. சமோசா பிரியர்களுக்கு இது அதிர்ச்சி செய்தியாகவே இருக்கும்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு உணவகத்தில் வழங்கப்பட்ட சமோசாவில் சிலந்தி இறந்து கிடந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதே போல மற்றொரு உணவகத்தில் சமோசாவிற்குள்ளே தவளையின் கால் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதை பார்த்த சமோசா பிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர். கொடுக்கும் பணத்திற்கு இப்படியெல்லாம் ஏமாற்றி விற்பனை செய்கிறார்களே என்று மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…