பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சுற்றுலா சென்ற ஒரு வெளிநாட்டவர், கடலில் அழகாகத் தெரிந்த ஒரு சிறிய வகை ஆக்டோபஸைக் கையில் எடுத்து விளையாடிய வீடியோ இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காண்பதற்குச் சாதுவாகத் தெரிந்த அந்த உயிரினம், உண்மையில் உலகிலேயே மிகக் கொடிய விஷம் கொண்ட ‘ப்ளூ-ரிங்ட் ஆக்டோபஸ்’ (Blue-ringed Octopus) ஆகும்.
இதன் உடலில் உள்ள விஷம், கொடிய சைனைடை விட ஆயிரம் மடங்கு அதிக வீரியம் கொண்டது. இது கடித்தால் உடலில் வலியே தெரியாது என்பதால், கடிக்கப்பட்ட நபர் தான் ஆபத்தில் இருப்பதை உணர்வதற்குள்ளேயே சில நிமிடங்களில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும்.
அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இந்த ஆக்டோபஸின் விஷத்திற்கு இன்றுவரை உலகில் மாற்று மருந்தே கண்டுபிடிக்கப்படவில்லை. ஆபத்தை உணராமல் அந்தச் சுற்றுலாப் பயணி அதனைத் தொட்டு விளையாடியதைக் கண்டு கடல் உயிரியல் வல்லுநர்கள் அலறியுள்ளனர்.
இந்த உயிரினம் அச்சுறுத்தலை உணரும்போது மட்டுமே அதன் உடலில் நீல நிற வளையங்கள் பளிச்செனத் தோன்றும். அதுவே மரணத்திற்கான எச்சரிக்கையாகும். தான் மயிரிழையில் உயிர் தப்பியதை உணர்ந்த அந்தப் பயணி, அதன் விபரீதத்தை அறிந்ததும் பெரும் நடுக்கத்தில் உறைந்து போயுள்ளார்.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று…
சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமான ஓஎம்ஆர் (OMR) சோழிங்கநல்லூர் - காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மகேந்திரா (Tech…
அதிமுகவில் உட்கட்சி பூசல் மற்றும் அணிகள் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த…
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதியான மகளிர் உதவித்தொகை திட்டத்தை நனவாக்கும் வகையில், 60 வயது…
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை சக மாணவர்கள் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய சம்பவம்…
சென்னை சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனமான டெக் மகேந்திராவில் (Tech Mahindra) இன்று ஏற்பட்ட பயங்கர தீ…