“முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் சர்ப்ரைஸ்.. 2 நாட்களுக்கு செம்ம ஆஃபர்.. மக்களுக்கு அமைச்சர் கொடுத்த ‘தளபதி’ லெவல் அப்டேட்”..!!

By Muthu Mani on ஆனி 18, 2026

Spread the love

தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான சி. ஜோசப் விஜய் ஜூன் 22, 1974 அன்று சென்னையில் பிறந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மே 2026-இல் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார். தற்போதைய அரசியல் சூழலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகக் கருதப்படும் இவரது பிறந்தநாளை, தவெக தொண்டர்களும் ரசிகர்களும் ஆடம்பரக் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம், கல்வி உபகரணங்கள் மற்றும் ரத்த தான முகாம்கள் போன்ற பல்வேறு சமூக நலத்திட்டங்களை வழங்கும் மக்கள் சேவை நாளாகவே ஆண்டுதோறும் கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய்-யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஜூன் 21 மற்றும் ஜூன் 22 ஆகிய தேதிகளில் மாநிலத்திலுள்ள வண்டலூர், மேலூர் அமிர்தி மற்றும் சேலம் குரும்பப்பட்டி ஆகிய மூன்று உயிரியல் பூங்காக்களுக்குப் பொதுமக்கள் இலவசமாகச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வழக்கமான முறையில் இணைய வழியாக இலவச நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு இந்த இரண்டு நாட்களும் பூங்காக்களுக்குள் செல்லலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த இரு நாட்களுக்கான ஒட்டுமொத்த நுழைவுக் கட்டணச் செலவான சுமார் 70 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை, தமிழக அரசுக்கு பாரமாக வைக்காமல் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அமைச்சரும், அவரது சகோதரர்களும் மற்றும் அவர்களின் குடும்ப அறக்கட்டளையும் இணைந்து முழுமையாகச் செலுத்தவுள்ளனர். குழந்தைகள் தெய்வங்களைப் போன்றவர்கள் என்றும், அவர்களின் மகிழ்ச்சிக்காகவே இந்தச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் வனத்துறை அமைச்சர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.