#image_title
பிரபல நடிகரான ராகவா லாரன்ஸ் சமூக சேவை செய்வதில் மிகவும் அக்கறை கொண்டவர். சமீபத்தில் கூட கேபிவை பாலாவுடன் இணைந்து கணவரை இழந்த ஒரு பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுக்க உதவி செய்துள்ளார். எப்போதும் லாரன்ஸ் பிறருக்கு உதவ வேண்டும் என்பதையே தனது லட்சியமாக நினைப்பார்.
இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் ராகவா லாரன்ஸ் கூறியிருப்பதாவது, புதுக்கோட்டை சேர்ந்த சிவசக்தி என்பவருக்கு 4 வயது இருந்த போது அவர்கள் உதவி கேட்டு எங்களிடம் வந்தார். அவர்களது தந்தை குடும்பத்தை விட்டு சென்றுவிட்டார்.
சிவ சக்தியையும், அவரது சகோதரியையும் அவர்களது தாயை கவனித்துக் கொள்ள வேண்டிய நிலை இருந்தது. அவர்கள் இருவரும் என் வீட்டில் தான் வளர்ந்தார்கள். இப்போது சிவசக்தி கணிதத்தில் பிஎஸ்சி முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். காவல் உதவி ஆய்வாளராக வேண்டும் என்பதுதான் சிவ சக்தியின் கனவு.
என்னை போலவே பிறருக்கும் உதவி செய்ய சிவசக்தி விரும்புகிறார். கல்விதான் சக்தி வாய்ந்த ஆயுதம். வார்த்தைகளை விட செயல் வலிமை மிக்கது என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் ராகவா லாரன்ஸ் சமூக சேவைகளை பாராட்டி வருகின்றனர்.
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…