இது நல்லா இருக்கே..! சிசிடிவி கேமரா முன் தினமும் பெற்றோர் செய்யும் அந்த வேலை… சந்தோஷத்தில் குதிக்கும் மகன்.. 40 லட்சம் பேர் பார்த்த நெகிழ்ச்சி வீடியோ வைரல் …!!

Spread the love

தொலைதூரத்தில் வசிக்கும் தனது வயதான பெற்றோரின் நலனைக் கருத்தில் கொண்டு, ஷிவானி சுக்லா என்ற நபர் தனது வீட்டில் சிசிடிவி (CCTV) கேமரா ஒன்றை பொருத்தியுள்ளார். அந்த கேமரா மூலம் தனது பெற்றோர் ஒவ்வொரு நாளும் தன்னிடம் பேசுவதும், செய்கைகள் மூலம் அன்பைப் பரிமாறுவதும் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. தொழில்நுட்பத்தை வெறும் கண்காணிப்புக்காக மட்டுமல்லாமல், உறவுகளுக்கு இடையிலான பாலமாகவும் பயன்படுத்த முடியும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

https://x.com/ChotaNewsApp/status/2034532563042332800?s=20

இந்தச் செயலைத் தனது வாழ்க்கையில் எடுத்த “மிகச்சிறந்த முடிவு” என்று ஷிவானி வர்ணித்துள்ளார். கேமரா முன்பு நின்று கொண்டு பெற்றோர் காட்டும் அந்தப் பாசமான செய்கைகளும், அவர்கள் மகனோடு  உரையாடும் விதமும் பார்ப்பவர்களின் கண்களைக் குளிரச் செய்கிறது. பெற்றோரை விட்டுப் பிரிந்து வேலை நிமித்தமாக வெளியூர்களில் வசிக்கும் பல பிள்ளைகளுக்கு, இந்த வீடியோ ஒரு பெரிய உத்வேகத்தைத் தந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே 40 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்ட இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பலரது மனங்களை வென்றுள்ளது. “தொழில்நுட்பம் மனிதர்களைத் தனிமைப்படுத்துகிறது” என்ற பொதுவான கருத்துக்கு மாறாக, அது அன்புக்குரியவர்களை இன்னும் நெருக்கமாக இணைக்க உதவும் என்பதை இந்த நெகிழ்ச்சியான பதிவு நிரூபித்துள்ளது. ஷிவானியின் இந்த முயற்சிக்கு இணையவாசிகள் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Soundarya

Recent Posts

மரண பயம் காட்டும் CCTV காட்சி… சுங்கச்சாவடியை நொடிப் பொழுதில் சாம்பலாக்கிய கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சிஹோரி சுங்கச்சாவடி அருகே ஜூன் 26 அன்று அதிகாலை நிகழ்ந்த லாரிக்…

5 minutes ago

பூமியைச் சுற்றப்போகும் 17 லட்சம் ஆபத்துகள்… விண்வெளியில் நடக்கப்போகும் ‘அந்த’ பயங்கரம்… இனி நட்சத்திரங்களை பார்க்கவே முடியாதா?… விஞ்ஞானிகள் வெளியிட்ட பகிர் அறிக்கை …!

விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது, எதிர்காலத்தில் மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக மாறும் என ஐரோப்பிய தெற்கு…

16 minutes ago

ஆதார் கார்டில் புதிய இமெயில் அப்டேட்… இனி எல்லாமே ஃப்ரீ…! எப்படி தெரியுமா…? UIDAI அதிரடி அறிவிப்பு…!!

இந்தியர்களின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI…

24 minutes ago

“நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்!”… தன் மரணச் செய்திக்கு ‘MBA சாய்வாலா’ பிரஃபுல் பில்லோரே கொடுத்த அதிரடி பதில்…!

'எம்பிஏ சாய்வாலா' என்று மக்களால் பரவலாக அறியப்படும் பிரபல இளம் தொழிலதிபர் பிரஃபுல் பில்லோரே, தான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்…

26 minutes ago

“ஓடும் காரில் ரொமான்ஸ்…? ரோட்டை பார்த்து ஓட்டாததால் நேர்ந்த விபரீதம்..! அரைகுறை ஆடையுடன் தம்பதி சிக்கிய வீடியோவால் இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!”

சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…

33 minutes ago