லெபனான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மறுபுறம், இந்தத் தீவிரமான பதற்றத்திற்குக் காரணமான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால், லெபனானில் கடந்த 100 நாட்களில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
லெபனானில் உள்ள தங்களின் கைக்கூலிகள் மூலம் பிரச்சனை செய்வதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளார்.
லெபனானில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லாவை (ஹில்புல்லா) ஈரான் கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மீது மீண்டும் தங்களின் தாக்குதல்களையும் பொருளாதாரக் கட்டுப்பாடுகளையும் கடுமையாக்குவோம் என்று அமெரிக்கத் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
