“யாரிடமாவது சொன்னா மீண்டும் அடிப்பேன்” வீட்டுப்பாடம் செய்யாத 2-ஆம் வகுப்பு மாணவனுக்கு “105 முறை அடி”… பிஸ்கட் கொடுத்து மிரட்டிய ஆசிரியை பணிநீக்கம்..!!

By Soundarya on மாசி 7, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில், வீட்டுப்பாடம் செய்யாததற்காக 2-ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் ஒருவர் 105 முறை குச்சியால் அடித்துத் துன்புறுத்தியச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கர்னல்கஞ்ச் (Colonelganj) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட MRG பொதுப் பள்ளியில், பிரகார் சிங் என்ற ஆசிரியர் சமூக அறிவியல் வீட்டுப்பாடத்தை முடிக்காத அபிஷேக் (10) என்ற மாணவனைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

குழந்தையை அடித்துவிட்டு, யாரிடமாவது சொன்னால் மீண்டும் அடிப்பேன் என மிரட்டி பிஸ்கட் கொடுத்துள்ளார். ஆனால், காயங்களுடன் வீடு திரும்பிய குழந்தை பெற்றோரிடம் அழுதுகொண்டே நடந்ததை விவரித்துள்ளது. குழந்தையின் தந்தை ராஜ் பிரசாத் கோஸ்வாமி அளித்த புகாரின் பேரில், கோண்டா போலீசார் ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியரை உடனடியாகப் பணியிலிருந்து நீக்கம் செய்துள்ளது