பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போட்டியாளர்கள் யாரும் மக்களைக் கவரவில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது. குறிப்பாக, போட்டியாளர்களான பார்வதியும் கம்ருதீனும் நிகழ்ச்சியின் விதிகளை மதிப்பதில்லை என்றும், மைக் அணியாமல் இருப்பது உள்ளிட்ட விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. மைக்கை கழற்றி வைத்ததற்காக பிக்பாஸ் தண்டனை வழங்கியும், அதை அவர்கள் சரியாக ஏற்கவில்லை.
இதற்கு வீட்டுத் தலைவரான அமித்தும், வினோத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கம்ருதீன் மற்றும் பார்வதியை ஊக்குவிப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், கம்ருதீனின் செயல்பாடுகள் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திவ்யா இல்லாதபோது அவரைப் பற்றிப் பேசிய கம்ருதீன், திவ்யா சண்டையிட்டபோது அவரை ‘வாடி, போடி’ என்று ஒருமையில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திவ்யா, தன்னை ஒருமையில் பேச அதிகாரம் இல்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதால், கம்ருதீன் மற்றும் பார்வதிக்கு உடனடியாக ‘ரெட் கார்டு’ கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து, தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
