நான் வேலை செய்த இயக்குனர்களிலேயே பாலச்சந்தர் மட்டும்தான் அந்த விஷயத்தில் கில்லாடி… ரஹ்மான் பாராட்டு!

By vinoth on ஜனவரி 8, 2025

Spread the love

இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்தி ரசிகர்களையும் தமிழ் சினிமா பாடல்களைக் கேட்க வைத்தவர் ஏ ஆர் ரஹ்மான் என்று சொல்வார்கள்.

தான் அறிமுகமான ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ஹிட்டடித்தன. அதன் பின்னர் ரஹ்மான் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் எல்லாம் இந்தியா முழுவதும் வைரல் ஹிட்டாகின. பாடல்களுக்காகவே சில பாடல்கள் ஹிட்டாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

   

இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோர்தான் அந்த காலத்தில் ரஹ்மானின் பாடல்களை மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றால் அது மிகையாது. அதன் பின்னர் இந்தி சினிமா, ஹாலிவுட் மற்றும் உலக சினிமா என அடுத்தடுத்து அவரின் வளர்ச்சி உயர்ந்து கொண்டே சென்றது.

   

இளையராஜா தன்னுடைய இசையால் தமிழ் சினிமாவை ஆண்டுகொண்டிருந்த போது ரஹ்மான் தன்னுடைய இருபதுகளில் அறிமுகமானார். ஆனால் முதல் படத்திலேயே தான் யாரென்பதை நிரூபித்து தேசிய விருது வரை சென்றார். முதல் படத்திலேயே அவர் இசை இந்தியா முழுவதும் அவரைக் கவனிக்க வைக்கும் இசையமைப்பாளர் ஆக்கியது.

 

 

ரஹ்மானை தன்னுடைய கவிதாலயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ‘ரோஜா’ படம் மூலமாக அறிமுகப்படுத்தினார் பாலச்சந்தர். அவரோடு பின்னர் டூயட் மற்றும் பார்த்தாலே பரவசம் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றவும் செய்தார்.

இந்நிலையில் பாலச்சந்தர் பற்றி பழைய நேர்காணல் ஒன்றில் பேசிய ரஹ்மான் “இயக்குனர்களுக்கு இசைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். அதற்காக பாலச்சந்தர் அளவுக்கு ராகத்தின் பெயர்கள் எந்த சூழ்நிலைக்கு எந்த ராகம் வேண்டும் என்ற அளவுக்குக் கூட தேவையில்லை. ஆனால் சில அடிப்படைகளாவது தெரிந்திருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.