காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஒருவர், நீண்ட நாட்களாக விடுமுறை கிடைக்காத விரக்தியில் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ள அதிமுக, திமுக அரசு காவலர் பற்றாக்குறையைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்காமல், இருக்கும் காவலர்களுக்குக் கூடுதல் பணிச்சுமையை அளிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளது. இது போன்ற பணி நெருக்கடியாலேயே காவலர்கள் விபரீத முடிவுகளை எடுப்பதாகவும், உடனடியாகப் பணிச்சூழலைச் சீரமைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
