நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு நபர், நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியைக் கேட்டு, எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைக்கும் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளாக ஒரு குழந்தைக்காக இறைவனிடம் கண்ணீருடன் பிரார்த்தனை செய்து வந்த அந்த தந்தை, தனது கோரிக்கை நிறைவேறியதை அறிந்தவுடன் உணர்ச்சிவசப்பட்டு நடுரோட்டிலேயே மண்டியிட்டு விழுந்தார்.
மேலும் சுற்றியிருப்பவர்கள் ஆச்சரியத்துடன் பார்க்க, அந்த நபர் தரையில் கிடந்த மழைநீரில் உருண்டு புரண்டு, “இயேசுவே உமக்கு நன்றி” என்று உரக்கக் கூச்சலிட்டு தனது நன்றியைத் தெரிவித்தார். தனது ஆடைகள் சேறாவதைப் பற்றியோ அல்லது மற்றவர்கள் தன்னை வேடிக்கை பார்ப்பதைப் பற்றியோ எவ்வித கவலையுமின்றி, அவர் காட்டிய இந்த நிபந்தனையற்ற அன்பு மற்றும் பக்தி பலரின் கண்களைக் குளமாக்கியுள்ளது.
A Nigerian man was very excited and praised God after receiving the news that his wife is pregnant after many years of waiting and praying pic.twitter.com/OogwMU9hFx
— Tevin Macharia Mukabana (@TevinMacharia) March 6, 2026
“>
இந்நிலையில் “இது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, பல வருட வலி மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடு” என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர். கடவுள் தங்களுக்கு அளித்த இந்த விலைமதிப்பற்ற பரிசைக் கொண்டாடும் அந்த மனிதரின் செயல், உண்மையான விசுவாசத்திற்கும் தந்தை பாசத்திற்கும் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
