Categories: CINEMA

வேகமில்லை, ஸ்டைல் இல்லை.. இப்படியும் கூட நடிக்கத்தெரியும் என்று காட்டிய ரஜினி.. அணைத்து தரப்பினருக்கும் பிடித்த ஒரு படம்..

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கும். உதாரணத்திற்கு ஒரு நடிகர் ஆக்‌ஷனில் கலக்குவார், ஒருவர் நகைச்சுவையில் கலக்குவார், ஒருவர் ஹூமரில் கலக்குவார். அப்படி தொடர்ந்து நடிப்பவர்கள், திடீரென தங்களது பாணியை மாற்றும் போது அது வெற்றி பெறுமா? என்பது சந்தேகம் தான். உதாரணத்திற்கு சந்தானத்தை கூறலாம். நகைச்சுவையில் கலக்கியவர், திடீரென ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்கி அதனால் வெற்றி அடைந்தார் என்றால் அது சந்தேகம் தான். மீண்டும் காமெடி ஹீரோவாக கலக்கத் தொடங்கினார் சந்தானம்.

#image_title

அப்படி சினிமாவில் ஸ்டைலுக்கு பெயர் போனவர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அத்தனை வருடங்களாக தனது ஸ்டைலான நடிப்பால் மிரட்டியவர், திடீரென தனது அத்தனை ஸ்டைலையும் மறைத்து வேறுஒரு மாதிரியாக நடித்திருந்தார். அவரை அப்படி ஒரு கோணத்தில் ரசிகர்கள் ரசிப்பார்களா என்ற சந்தேகம் நிச்சயம் யாருக்கேனும் வந்திருக்கும். ஆனால் அப்படத்தை கொண்டாடித் தீர்த்தனர் ரசிகர்கள். அப்படியான படம் ஆறிலிருந்து அறுபது வரை. பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1979-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆறிலிருந்து அறுபது வரை.

#image_title

அத்தனை ஆண்டுகளாக ஸ்டைலில் கலக்கிக் கொண்டிருந்தவர், அடக்க ஒடுக்கமாக, ஒட்டுமொத்த குடும்பத்தின் பாரத்தை தன் தோள் மீது ஏற்றி, தனது தம்பிகள், தங்கையை படிக்க வைத்து நல்ல வேலைக்கு அனுப்புவார் ரஜினிகாந்த். ஆனால் அவர்கள் மூவரும் அண்ணனின் கஷ்டத்தை தெரிந்து கொள்ளாமல் ஆளுக்கு ஒரு திசையில் செல்ல தட்டுத் தடுமாறி வறுமையின் உச்சத்திற்கே சென்று மீண்டும் வாழ்க்கையில் உயர்ந்து நிற்பார் ரஜினி. அதுவரை அவரை வசதி இல்லாதவர் என ஒதுக்கி வைத்த தம்பிகள் தங்கை மீண்டும் அவரை வந்து ஒட்டிக் கொள்ள, மனைவியை இழந்து வெறும் பணம், புகழைக் மட்டும் வைத்து சந்தோஷமாக வாழ முடியாமல் இறுதியில் தனி மரமாய் இறந்து போவார் ரஜினி.

#image_title

ரஜினியின் நடிப்புத் திறமையை இப்படம் பறைசாற்றியது எனலாம். ரஜினி, படாபட் ஜெயலட்சுமி, சோ, சங்கீதா, சக்கரவர்த்தி, ஜெயா முதலானோர் நடிப்பில் இப்படத்தில் சோகம், குடும்பச் சுமை, றெக்கை முளைத்ததும் பறந்துவிடுகிற உறவு, வறுமை, வெறுமை, இயலாமை, கோபம், ஆத்திரம், அழுகை என படம் முழுக்க நடிப்பில் அசத்தியிருப்பார் ரஜினி. முதலில் ரஜினிக்கு இந்தப் படத்தின் மீது பெரிய சந்தேகம் இருந்ததாம். ‘சரியா வருமா சரியா வருமா’என்று கேட்டுக்கொண்டே இருந்தார். ‘ஓடாது போல’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாராம்.

#image_title

தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் உத்வேகத்தால் நடித்துமுடித்தாராம் ரஜினி. ரஜினியின் நடிப்பில் இப்படம் என்றுமே பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய படமாக அமைந்தது. இப்படம் வெளியாகி 41 ஆண்டுகள் ஆகிறது.

Archana
Archana

Recent Posts

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

2 hours ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

16 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

17 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

18 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

19 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

21 hours ago