தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம், எல்லம்மா குட்டா பகுதியைச் சேர்ந்த பி. லெட்சுமி என்ற பெண், தனது 2 மாத ஆண் குழந்தையை ரூ.2.4 லட்சத்திற்கு விற்றுள்ளார். இதுகுறித்த விசாரணையில் லெட்சுமி மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், மது குடிக்கப் பணம் இல்லாததால் குழந்தையை விற்கும் முடிவை எடுத்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகக் குழந்தையின் தாய் லெட்சுமி, திருமணத் தரகு நிறுவனத்தைச் சேர்ந்த ரமாதேவி, மஞ்சுளா மற்றும் குழந்தையை வாங்கிய புனேவைச் சேர்ந்த விஷால் ஆகிய 4 பேரை நிஜாமாபாத் போலீசார் கைது செய்துள்ளனர். லெட்சுமியின் கணவர் ஸ்ரீனிவாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், குழந்தையைப் பத்திரமாக மீட்டு மீண்டும் இயற்கை பாதுகாவலரான தாயிடமே (குழந்தைக்கு 5 வயதிற்கு மேல் ஆகாததால்) ஒப்படைத்துள்ளனர்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…