தனது மகனின் முன்னேற்றத்திற்காகத் தனது தூக்கம், ஆசைகள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கையையே தியாகம் செய்த ஒரு தாயின் உருக்கமான கதை சமூக வலைதளங்களில் பலரது கண்களைக் குளமாக்கியுள்ளது. பல போராட்டங்களுக்குப் பிறகு தனது மகன் போலீஸ் உடையில் கம்பீரமாக நிற்பதைக் கண்ட அந்தத் தாயின் முகம் சொல்லொணா மகிழ்ச்சியில் திளைக்கிறது. தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய தனது தாய்க்கு, அந்த மகன் மரியாதையுடன் நன்றி செலுத்தும் காட்சி, காண்போரை நெகிழ வைக்கிறது.
பெற்றோர்கள் எப்போதுமே தங்கள் வெற்றியை விட, தங்கள் பிள்ளைகளின் வெற்றிக்காகவே இறைவனிடம் அதிகம் பிரார்த்தனை செய்கிறார்கள் என்பதற்கு இந்த நெகிழ்ச்சியான தருணம் ஒரு சிறந்த சான்றாகும். வறுமையையும் இன்னல்களையும் கடந்து ஒரு தாயின் கடின உழைப்பால் உருவான இந்த வெற்றி, பல இளைஞர்களுக்குப் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.
Tears in my eyes… A mother who sacrificed everything-her sleep, dreams & life-so her son could rise. Today, he salutes her in uniform, the woman who made him who he is.
This salute is his silent promise: “Ma, everything I am, I owe to you.” ❤️
Parents truly pray for our… pic.twitter.com/RI4QY0soyK
— Aparajite (@amshilparaghu) March 30, 2026
