திமுகவின் அண்மைய தேர்தல் தோல்விக்கு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் சாதி ரீதியான செயல்பாடுகளே முக்கிய காரணம் என அக்கட்சியின் கள ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சீனியர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை அதிரடியாக மாற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்தும் நோக்கில், திமுகவின் அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கையை 110-க்கும் மேல் உயர்த்தி, அதில் இதுவரை இல்லாத அளவிற்கு பெண்கள், பட்டியல் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினருக்கு அதிகளவில் பிரதிநிதித்துவமும் முக்கிய அங்கீகாரமும் வழங்க அக்கட்சித் தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
