குடிக்க பணம் இல்லாததால்… நாயை துண்டுதுண்டாக வெட்டி முயல்கறி என விற்ற நபர்.. சாப்பிட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

By Soundarya on மார்கழி 25, 2025

Spread the love

பீகார் மாநிலம் மோதிஹரியில், மது குடிப்பதற்குப் பணம் இல்லாததால் வாலிபர் ஒருவர் செய்த அருவருப்பான செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுப் பழக்கத்திற்கு அடிமையான மங்ரு சாஹ்னி என்ற வாலிபர், மது வாங்குவதற்குப் பணம் இல்லாததால் தெருவில் சுற்றிய நாய் ஒன்றைக் கொன்று, அதன் இறைச்சியைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.

அந்த நாய் இறைச்சியை “முயல் கறி” என்று பொய் கூறி, கிராம மக்களிடம் ஒரு கிலோ ரூ.1,000 என்ற விலையில் விற்றுள்ளார். குளிர்காலம் என்பதால் கறிக்கு அதிகத் தேவை இருந்ததைப் பயன்படுத்தி அவர் பல குடும்பங்களை ஏமாற்றியுள்ளார். சுமார் 15 முதல் 20 பேர் இந்த இறைச்சியை வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே குழந்தைகள் உட்பட பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

   

மறுநாள் அந்த வாலிபரே போதையில் தான் நாய் இறைச்சியைத்தான் கொடுத்ததாகக் கூறி கத்தியுள்ளார். கிராமத்தினர் சோதித்துப் பார்த்தபோது நாயின் தலை மற்றும் கால்கள் கண்டெடுக்கப்பட்டதால் உண்மை உறுதியானது. இச்சம்பவம் குறித்து மதுபன் பிளாக், கராஹியா பஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள மங்ரு சாஹ்னியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்