“டேய் விட்ருங்கடா” சிங்கத்திற்கே வந்த சோதனை… எருமைக் கூட்டத்தின் ‘ருத்ர தாண்டவம்’ – மிரண்டு போய் மரத்தில் ஏறிய காட்டு ராஜா..!!

By Soundarya on மாசி 7, 2026

Spread the love

காட்டுக்கு ராஜாவாகக் கருதப்படும் சிங்கம், தனது அபார வலிமையால் எந்தவொரு விலங்கையும் வேட்டையாடும் திறன் கொண்டது. ஆனால், தனித்தனி விலங்குகளை விடக் கூட்டமாக இருக்கும் விலங்குகள் சிங்கத்திற்கே சிம்மசொப்பனமாக விளங்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வேட்டையாடச் சென்ற சிங்கம் ஒன்று, எதிர்பாராத விதமாக எருமைக் கூட்டத்திடம் சிக்கித் தவிக்கும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தக் காணொளியில், ஒரு எருமையைத் தனியாகப் பிரித்து வேட்டையாட சிங்கம் முயற்சிக்கிறது. ஆனால், அந்த எருமையைக் காப்பாற்ற ஒட்டுமொத்த எருமைக் கூட்டமும் ஆக்ரோஷத்துடன் திரண்டு வருகிறது. எருமைகளின் ஒற்றுமையைக் கண்டு மிரண்டு போன சிங்கம், முதலில் புதர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறது. இருப்பினும், எருமைகள் விடாமல் துரத்தியதால், வேறு வழியின்றித் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு மரத்தின் மீது ஏறி தஞ்சம் புகுந்தது. பலம் வாய்ந்த சிங்கம் எருமைகளுக்குப் பயந்து மரத்தில் ஏறி நிற்கும் இந்த அபூர்வக் காட்சி இணையத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.