“ஐயோ முடியலப்பா சாமி… லோக்கல் ரயில் நெரிசலை பார்த்து அலறி அடித்து… ஓடிய கொரிய சுற்றுலாப் பயணி… இங்குள்ள மக்கள் மீது… ஆழ்ந்த மரியாதையை ஏற்படுத்தியது… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!”

By Swetha on ஆவணி 13, 2026

Spread the love

தென் கொரியாவைச் சேர்ந்த செஜின் என்ற சுற்றுலாப் பயணி இந்தியாவில் பயணம் செய்து வரும் நிலையில், மும்பையின் புகழ்பெற்ற லோக்கல் ரயிலில் பயணித்து அனுபவம் பெற விரும்பியுள்ளார். இதற்காக தானே ரயில் நிலையத்திற்குச் சென்ற அவர், ரூ 170 கொடுத்து இரண்டு மணி நேர ரவுண்ட்-டிரிப் பயணச்சீட்டை வாங்கினார். ஆனால், ரயில் மேடைக்கு வந்து நின்றதும் பயணிகள் அதிவேகமாக முண்டியடித்துக்கொண்டு ஏறத் தொடங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செஜின், முதல் முயற்சியிலேயே ரயிலில் ஏற முடியாமல் பின்வாங்கினார்.

தனது முயற்சியைக் கைவிடாமல், அடுத்த ரயிலுக்காகக் காத்திருந்து இரண்டாவது முறையும் ஏற முயன்றார். இருப்பினும், அப்போதும் கூட்ட நெரிசலையும் பயணிகளின் வேகத்தையும் சமாளிக்க முடியாமல் அவரால் ரயிலுக்குள் செல்ல முடியவில்லை. இதனால் ஏமாற்றமும் சோர்வும் அடைந்த அவர், லோக்கல் ரயிலில் பயணிக்கும் திட்டத்தைக் கைவிட்டு, இறுதியில் டாக்ஸி பிடித்துத் தனது பயணத்தைத் தொடர்ந்தார். இந்த முழு சம்பவத்தையும் வீடியோவாகப் பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

   

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், “மும்பை லோக்கல் ரயில் அனுபவம் எனக்கு இங்குள்ள மக்கள் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியுள்ளது” என்று செஜின் குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், மும்பை லோக்கல் ரயிலில் தினமும் பயணிக்கும் மக்களின் உழைப்பைப் பாராட்டியும், செஜினுக்கு அறிவுரைகளை வழங்கியும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, கூட்ட நெரிசல் மிகுந்த அவசர நேரங்களில் பயணிப்பதைத் தவிர்க்குமாறும், புதிய இடங்களுக்குச் செல்லும்போது சக பயணிகள் அல்லது ரயில்வே ஊழியர்களின் உதவியைப் பெறுமாறும் பயனர்கள் அவருக்குப் பரிந்துரைத்துள்ளனர்.