காலையிலேயே இபிஎஸ்-க்கு ஷாக்.. முக்கிய புள்ளியை தட்டி தூக்கிய செந்தில் பாலாஜி… அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியம்…!

By Nanthini on மார்கழி 23, 2025

Spread the love

தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் இந்த முறையும் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் ஸ்டாலின் பல வியூகங்களை வகுத்து வருகின்றார். தனது கூட்டணி கட்சிகளை பலமாக வைத்திருக்கும் திமுக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வரும் நிலையில் அவர்களுடனும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் பிற கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை திமுகவிற்கு அழைத்து வரும் பணிகளை செந்தில் பாலாஜி செய்து வருகின்றார். அதன்படி செந்தில் பாலாஜி முன்னிலையில் நாமக்கல் மோகனூர் மேற்கு ஒன்றிய அதிமுக துணை செயலாளராக இருந்த R.V.R. செந்தில்குமார் திமுகவில் இணைந்துள்ளார். அவருடன் சேர்ந்து பரமத்தி ஒன்றிய அதிமுக வர்த்தக அணி செயலாளர் கிருஷ்ணசாமி உட்பட பல அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.