தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் திமுக தனது கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. என்னதான் தனது கூட்டணியை பலமாக வைத்திருந்தாலும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகின்றார். ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்று கட்சியினர் பலரும் திமுகவில் இணைந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் சமீப காலமாகவே திமுகவில் இணைந்து வருவதால் நாளுக்கு நாள் ஸ்டாலினுக்கு பலம் கூடிக்கொண்டே செல்கிறது.
இப்படியான நிலையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக EX MLA-க்கள் இருவர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். 1991 தேர்தலில் சிவகாசி MLA-வாக இருந்த பாலகங்காதரன், பழனி MLA-வாக இருந்த சுப்புரத்தினம் ஆகிய இருவரும் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். இதில் குறிப்பாக பாலகங்காதரன் OPS-க்காக ஆதரவாக TV நிகழ்ச்சிகளில் பங்கேற்று மும்முரம் காட்டி வந்த நிலையில் திடீரென கட்சி மாறியுள்ளார். சமீபத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் எம் எல் ஏ திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கிற்கு எதிராக, தமிழக அரசு…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட 'ஆக்ரா சௌபட்டி' என்ற இடத்தில், பொழுதுபோக்கிற்கான ஜிப்-லைனிங் (Zip-lining)…
திமுகவில் மீண்டும் 'செயல் தலைவர்' பதவி கொண்டு வரப்படவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை…
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை…
தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, சட்டப்பேரவையில் விஜய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஆற்காடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்…