தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் திமுக தனது கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. என்னதான் தனது கூட்டணியை பலமாக வைத்திருந்தாலும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகின்றார். ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்று கட்சியினர் பலரும் திமுகவில் இணைந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் சமீப காலமாகவே திமுகவில் இணைந்து வருவதால் நாளுக்கு நாள் ஸ்டாலினுக்கு பலம் கூடிக்கொண்டே செல்கிறது.
இப்படியான நிலையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக EX MLA-க்கள் இருவர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். 1991 தேர்தலில் சிவகாசி MLA-வாக இருந்த பாலகங்காதரன், பழனி MLA-வாக இருந்த சுப்புரத்தினம் ஆகிய இருவரும் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். இதில் குறிப்பாக பாலகங்காதரன் OPS-க்காக ஆதரவாக TV நிகழ்ச்சிகளில் பங்கேற்று மும்முரம் காட்டி வந்த நிலையில் திடீரென கட்சி மாறியுள்ளார். சமீபத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் எம் எல் ஏ திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராம காட்டுப்பகுதியில், கடந்த மார்ச் 11 ஆம் தேதி பிளஸ் 2…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், தற்போதைய தவெக அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.…
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்த விமர்சனங்கள் அரசியல் அரங்கிலும் பொதுமக்கள் மத்தியிலும்…
தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் மோதல், வெறும் தற்காலிக இடஒதுக்கீடு…
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமைகளை சீரமைப்பதுடன், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு நீதிமன்றம் மூலம் மிகக்…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) உட்கட்சி அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்கள்…