தமிழகத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் தூண்களாக விளங்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் சுமையை குறைக்க, 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியின்படி திமுக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த 2021 மார்ச் 31 நிலவரப்படி நிலுவையில் இருந்த 10.56 லட்சம் பெண்களின் ரூ.2,674 கோடி மதிப்பிலான கடன்களைத் தள்ளுபடி செய்ய அரசு உத்தரவிட்டது. இதன் மூலம் பல ஆண்டுகளாகக் கடன் தவிப்பில் இருந்த லட்சக்கணக்கான பெண்கள் நிம்மதி அடைந்ததோடு, புதிய நம்பிக்கையுடன் சிறு தொழில்களில் ஈடுபடும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த கடன் தள்ளுபடித் திட்டத்தைச் செயல்படுத்த, அசல் மற்றும் வட்டித் தொகையை வங்கிகளுக்கு ஈடுகட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. தற்போது, 2025 ஏப்ரல் 30 வரையிலான 7 சதவீத வட்டித் தொகையான ரூ.193.68 கோடியை அரசு விடுவித்துள்ளது. இதனுடன் அசல் தொகையான ரூ.2,118.85 கோடியையும் சேர்த்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்த நிதி விடுவிப்பு நடவடிக்கையால் கூட்டுறவு வங்கிகளின் நிதிநிலை பலப்படுத்தப்பட்டுள்ளது.
அரசிடமிருந்து அசல் மற்றும் வட்டித் தொகை முழுமையாகக் கிடைத்துள்ளதால், இனி மகளிர் குழுக்கள், விவசாயிகள் மற்றும் சிறு தொழில் முனைவோருக்கு எவ்விதத் தடையுமின்றி புதிய கடன்களை வழங்க முடியும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பெண்களின் நிதிச் சுதந்திரத்தை உறுதி செய்வதோடு, சமூக மேம்பாட்டிற்கும் பெரும் ஊக்கமளிக்கும். அதே வேளையில், 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அடுத்தகட்ட அறிவிப்புகளையும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை (மே 4) வெளியாக உள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.…
உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில், பழுதடைந்த தண்ணீர் தொட்டியின் உச்சியில் 15 மணி நேரம் உயிருக்காகப் போராடிய இரண்டு சிறுவர்களை…
விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தனது தொகுதியில் முகாமிட்டுள்ளார்.…
தெலங்கானா மாநிலம் சிவன்னகுடா பகுதியைச் சேர்ந்த நரசிம்ஹ (60) என்பவர், வேலை நிமித்தமாக ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து கூலித்தொழில் செய்து வந்தார்.…
திரிபுராவில் 16 வயது சிறுமியை அவரது தாத்தாவே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…
லக்னோவைச் சேர்ந்த உபேந்திர குப்தாவின் மகள்கள், ஐஏஎஸ் (IAS) மற்றும் சிபிஐ (CBI) போன்ற மிகக்கடினமான தேர்வுகளில் வெற்றி பெற…